Tuesday, June 22, 2010

அரசின் கல்விகடன்

சமீபத்திய நாளிதழ் ஒன்றில் அரசின் கல்விகடன் பற்றிய அறிவிப்பை படித்தேன், படித்தவுடன் நிறைய முரண் பாடுகள் அரசின் கல்வி கொள்கைகளில் இருப்பதாக எனக்கு தோன்றியது அதன் பாற்பட்டதே இந்த அஞ்சல்.இந்திய அரசியல் அமைப்பு சட்ட படி அனைவருக்கும் பள்ளி கல்வி என்று சொல்கிறோம் ஆனால் அந்த பள்ளி கல்வியே செல்வந்தருக்கு வசதி படைத்த விதத்திலும், எளியவர்க்கு வசதிகள் இல்லாத அரசு பள்ளிகளிலும் கிடைப்பது மிகவும் வருந்த வேண்டிய ஒன்று தானே ?

சட்டப்படி கல்வி நிறுவனங்கள் லாப நோக்கில் நிறுவப்பட கூடாது ஆனால் உண்மையில் நடப்பது என்ன இன்று வரை தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றிசல் போல கிளம்பிவிட்டன. அரசு அதிகாரிகளின் துணையுடன் அரசியல் வாதிகள் துவங்கும் நிறுவனங்களே அதிகம் இதே நிலை நீடித்தால் என்ன ஆகும் ?

என்ன ஆகும் என்று நான் சொல்வதை விட சின்ன உதாரணம் ஒன்றை நான் குறிப்பிட்டாலே நீங்களே புரிந்துகொள்ள முடியும் . எண்பதுகளில் சுற்றுலா பேருந்தாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களை அனுமதியில்லாமல் கட்டண பேருந்து போல் பயந்து பயன்படுத்திய காலம் போய் இன்று தனி பேருந்து நிலையமே கட்டி தந்து உள்ளது அரசு. இதை போன்ற வணிக ரீதியான லாபநோக்கோடு தனியார் கல்வி நிறுவனங்கள் செயல் பட தான் இந்த கல்வி கடன் உதவி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை அல்லவா?. என்று தனியார் மயமாக்கல் மற்றும் சந்தை பொருளாதாரம் நமது நாட்டில் விதிக்கப்பட்டதோ அன்றே கல்வி வணிகத்துக்கு கொல்லைப்புறமாக அனுமதி வழங்கப்பட்டு விட்டது என்பதே உண்மை.
இதன் விளைவு காலபோக்கில் என்னவாக இருக்கும் ? சாமானியனுக்கும் கடன் வசதி கிடைக்கும் என்று அமைச்சர்கள் ஆரவரிபர்கள் , சாமானியனும் கடன் கிட்டிய மகிழ்ச்சியில் திளைப்பான் ஆனால் உண்மையில் என்ன நடக்கும். சாமானியனின் வரிப்பணம் வங்கிகள் மூலம் அவனுக்கே கடனாக கொடுக்கப்பட்டு கல்வி வியாபாரிகள் கல்லாவில் கொண்டுபோய் சேர்க்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஆகமொத்தத்தில் கல்வி வியாபாரமாக மாற்றப்பட்டு விட்டது என்பதில் சந்தேகம் எஅதும் இல்லை, அப்படி வியாபாரமாக மறைமுகமாக அங்கிகாரம் கொடுத்துவிட்டால் என்ன நடக்கும் ? நமது கல்வி வியாபாரிகளின் துணையுடன் உலகளவில் கொள்ளை பணம் பங்கு போடப்படும் என்பதே உண்மை !!!!!!!!