Monday, September 27, 2010

பள்ளி குழந்தைகளுக்கு தனி பயிற்சி(Tution) வரமா சாபமா ?

      இன்றைய  குழந்தைகளின் கல்வி தேடலின் பாதையை சற்று உற்று நோக்கினால் நமது மனம் கனத்து விடும். அதிகாலையில் முதுகில் புத்தக சுமையுடன் பள்ளிகிளம்பும் பிள்ளைகள்  மாலையில் உடலும் மனமும் சோர்ந்து வீடு திரும்பும் குழந்தைகளை அத்துடன் விடுவதில்லை பெற்றோர் மறுபடியும் மாலையில் புத்தக மூட்டை முதுகில் ஏற்றப்பட்டு , சுமைதூக்கும் கழுதையாய் தனி பயிற்சிக்காய் ஒரு கூடுதல் பயணம்.
     குழந்தைகளை கொடுமை படுத்தும் இந்த அவலத்திற்கு  யார் காரணம் ? கல்வி புதையல் தேடும் பெற்றோரா ? அல்லது காசுக்கு கடைவிரித்திருக்கும் கல்வி நிறுவனங்களா? விடை தேடி பயணித்தால் கல்விநிறுவனங்கள் மற்றும் பெற்றோரின் பேராசைக்கும் கனவுகளுக்கும் பலியாகி போனது குழந்தைகளின் நிகழ்காலம் மட்டுமல்ல ஆரோக்கியமான வருங்கால இந்தியா என்ற கனவும் தான் !
   சரி இந்த தனி பயிற்சிக்கு என்ன அவசியம் ? அப்படியானால் பள்ளிகளில் என்ன தான் சொல்லி கொடுகிறார்கள்? சரியான முறையில் பள்ளிகளில் சொல்லிகொடுபதிலையா ? அப்படி சொல்லிகொடுக்கதானே கட்டணமாக பெரும்தொகையை கொட்டிகொடுகிறோம் பிறகு ஏன்  தனிபயிற்சி என்று என்ற பெற்றோரும் சிந்திப்பதும் இல்லை தட்டிகேட்பதும்  இல்லை. பெற்றோரின் பொறுப்பின்மையும், மற்றபடி தட்டி கேட்க துணியாத மனோபாவம் மற்றும் பேராசையும் குழந்தைகளின் முதுகில் சுமையாய் அழுத்துவது தான் நிஜம்.
    இந்த அவலத்தில் பெற்றோரின் பங்கு அதிகம். எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தைகள் கல்விகற்றுகொள்ள அனுப்புகிறோம் கல்வி கற்றால் போதும் என்று எண்ணுவதில்லை அதற்கும் மேலாக முதல் மதிப்பெண், முதல் மாணவன், படித்து முடித்தவுடன் பெட்டிபெட்டியாய் வாங்க போகும்   ஊதியம் மட்டுமே முதன்மையாய் கருதுவதின் விளைவு தங்களின் பிள்ளைகளின் முதுகில் ஏற்றிய சுமை.
   பள்ளிகளோ பணத்தில் குறியாய் இருக்கும் அளவு கல்வித்தரத்தில் குறியாய் இருபதில்லை.தகுதி குறைவான ஆசிரியர்கள், அதிக பளு நிறைந்த  பாடத்திட்டம் இப்படி பல காரணங்கள். கட்டண குறைபிற்காக போராடும் பெற்றோரும், கூடுதல் கட்டணத்திற்காக போராடும் குழந்தைகளை பற்றி கிஞ்சித்தும் நினைப்பதில்லை.
 
 ஆக மொத்தத்தில் , குறைபாடு உடைய குழந்தைகள் மற்றும் மெதுவாக கற்கும் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமான இந்த தனிபயிற்சி ஏனைய குழந்தைகளுக்கு சாபமாய் போனது உண்மை. ஆனால் இந்த சுமை பெற்றோர்களும் சமுதாயமும் வலுகட்டாயமாக வலிந்து  பிஞ்சுகளின் முதுகில் ஏற்றிய சுமை என்பது தான் வேதனை நிரம்பிய உண்மை .