Sunday, February 13, 2011

வலை பதிவாளர்கள் மேல் அரசின் அறிவிக்காத தணிக்கைமுறை

சீனாவை பொறுத்தவரை இன்டர்நெட் பயன்பாடு என்பது தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட ஒன்று என்பதால் அதுகுறித்த அரசின் அணுகுமுறை என்பது வெளிப்படையான ஒன்று எனவே மாற்று கருத்துக்கோ, கேள்விகளுக்கோ அங்கு இடமில்லை , ஆனால் சமீப காலமாக இந்தியாவில் இன்டர்நெட் மற்றும் பதிவாளர்கள் (bloggers) மீது மறைமுகமாக தணிக்கை முறை ஏவி விடப்பட்டு உள்ளதாகவே தோன்றுகிறது.
முதலாவதாக பதிவாளர்களின் paypal  கணக்குகளின் மீது கடுமையான சட்ட திட்டங்கள் ஏவி விடப்பட்டன. அதன்படி பதிவாளர்கள் டாலர்களில் சம்பாதிக்கும் அன்னியசெலாவணி அப்படியே இந்திய வங்கி கணக்குக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகள் ஏவிவிடபட்டுளன.
 சமீபகாலத்தில், மத்திய மாநில அரசுகளை பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகள் விமர்சிததைவிட வலை பதிவாளர்கள் விமர்சித்ததுதான் அதிகம். ஆம் வலைபதிவாளர்களின் விமர்சனம் படித்தவர்களை நேரடியாக சென்றடைந்தது. அதன் விளைவும் அனைவரும் அறிந்ததே. இதை தாங்கிக்கொள்ள முடியாத ஆட்சியாளர்களின் கோபம் வேறுவிதமாக வலை பதிவாளர்களை தாக்குகிறது . இந்த சிலமாதங்களில் பெரும்பாலான google blogspot blogs  திறக்கமுடியாத நிலைமையில் உள்ளன. ISP  எனப்படும்  service provider களிடம் மிகவும் போராடியே அவைகளை வலை பின்னலில் திறக்க செய்ய வேண்டிஉள்ளது.

இதில் அதிசயமான ஒன்று இன்றுவரை google இதுகுறித்து எந்த ஒரு கேள்வியும் எழுப்பாததுதான்.  Google அமைதியை  உடைக்கும் போதுதான் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். கூடிய சீக்கிரம் வரவேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பமும் கூட!!!!!!!

Thursday, February 10, 2011

ஊழல் குற்றசாட்டுகளுக்கு தண்டிக்கப்படவேண்டியவர்கள் அரசியல் வாதிகளா ? அதிகாரிகளா?

                 சமீப காலகட்டத்தில் இந்தியாவில்  அரசியல் வாதிகளுக்கு எதிரான ஊழல் குற்ற சாட்டுகள் கவலை யளிப்பதாக உள்ளன. இதில் ஒட்டுமொத்த அரசியல் வாதிகளும் மக்களை கோமாளிகளாகவும்  ஏமாளி களாகவும் எண்ணி தங்கள் அரசியல் நாடகத்தை  அரங்கேற்றுவது வெட்ககேடான ஒன்று.
அலை கற்றை ஊழல் விசயத்தில் அரசியல் வாதிகளின் அணுகுமுறையை சற்று கூர்ந்து கவனித்தால் விஷயம் புரியும். எதிர் கட்சிகள் விசாரணை கோரி போராட்டம் நடத்தினால் ஆளும் கட்சி பதிலுக்கு விசாரணை நடத்தலாம் ஆனால் முந்தைய உங்கள் ஆட்சி காலத்தையும் சேர்த்து விசாரணை செய்யலாம் என்கின்றனர். அப்படியானால் யாருமே நேர்மையானவர்கள் இல்லை என்பது தானே உண்மை!
                         இவ்வளவு துணிச்சலாக அரசியல் வாதிகள் குற்றம் புரிய உதவிசெய்வதும், துண்டுவதும் யார் ? சந்தேகமே இல்லாமல் அரசு பணியில் முதல் நிலையில் உள்ளவர்கள் தான். எழுத படிக்கச் தெரியாத ஒரு அரசியல்வாதி பதவிக்கு வரும் பொழுது ஒன்றுமே தெரியாமலே பதவி ஏற்கிறான்.ஆனால் அவனுக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகள் ஊழல் செய்வது எப்படி என்றும், சட்டத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்றும் பாடம் எடுக்காத குறையாக கற்பிகின்றார்கள். ஆக பதவி ஏற்ற கொஞ்ச காலத்திலே அரசியல் வாதிகள் மிக திறமை வாய்ந்த ஊழல் பெருச்சாளிகளாக அதிகாரிகளின் தயவால் மாறிவிடுகின்றனர். எனவே அரசியல் வாதிகளை தண்டிப்பதை விட அதிகாரிகளை தண்டிப்பதே ஊழலை தடுக்க பெரிதும் உதவும்.
          நீங்கள் அறிந்திருப்பீர்கள், பெரும்பாலான ஊழல் தொடர்பான திட்டங்களின் கோப்புகள் நீதி விசாரணைக்கு வருமுன்னரே காணமல் போய்விடுவதான் காரணம் தெரியுமா?
          சம்மந்தப்பட்ட கோப்புகளில் நேர்மையான அதிகாரிகள் திட்டங்களுக்கு எதிரான குறிப்புகள் எழுதி இருப்பார்கள் அந்த கோப்புகள் அப்படியே சமர்ப்பிக்க படுமானால், ஊழல் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு துணை போனவர்களும் மாட்டிகொள்வார்கள் என்பதாலேயே மறைக்க பட்டுவிடுகின்றன.
             ஆக எல்லா விதத்திலும் அதிகாரிகளின் பங்கு ஊழலில் அதிகம் என்பதால் ஊழலை கட்டுபடுத்தவேண்டுமானால் துணைபோகும் அதிகாரிகளை முதன்மை குற்றவாளிகளாக அறிவித்து தண்டனைக்கு உட்படுத்தினால் மட்டுமே  ஊழலை ஒழிக்க முடியும்.

Wednesday, February 9, 2011

இலங்கை வரும் நாட்களில் இந்தியாவின் மிகபெரும் அச்சுறுத்தல் !!!!!!!

          நமது நாட்டை பொறுத்தவரை தென்பகுதி அதுவும் குறிப்பாக தமிழகம் என்றுமே அமைதி பூங்கா வாகத்தான் திகழ்ந்து வந்தது.ஆனால் இலங்கை வாழ் தமிழர்களின் முதுகில் இன்றைய ஆட்சி யாளர்கள் என்று குத்தினார்களோ; அன்றே நாட்டின் தென்பகுதி பாதுகாப்பு கேள்விகுறியாகி விட்டது. இலங்கை தமிழர்களின் போராட்டத்தை நசுக்க இந்தியர்களின், குறிப்பாக தமிழின துரோகிகளின் ஆதரவை பயன்படுத்திகொண்ட சிங்கள ஆட்சியாளர்கள் அதே சமயம் சீன பாகிஸ்தான் உடனான நட்பை  கொல்லைபுறம் வழியாக பலப்படுத்தி கொண்டனர் .
             தமிழ் போராளிகளை அழித்து ஒழிக்க ஆயுத உதவிகளை தாரளமாக செய்த சீனா தெற்கு இலங்கையில் ஒரு துறை முகத்தை நவீன படுத்துகிறது . நமது ஒட்டு பொறுக்கிகள்  அவர்கள் துறைமுகத்தை அவர்கள் நவீன படுத்தினால் என்ன என்று கேள்வி கேட்பார்கள் , ஆனால் பாதுகாப்பு துறை வல்லுனர்களின் கருத்துப்படி மிக குறைந்த அவகாசத்தில் அந்த துறைமுகத்தை ஒரு அதிநவீன கப்பல்  படை தளமாக சீனா வால் மாற்ற முடியும். இந்தியாவின் வடக்கில் அத்துமீறும் சீனா தற்போது தெற்கிலும் கால் பதிப்பது மிகவும் துரதிஷ்டவசமானது.இலங்கையில் சீனர்களின் நுழைவு நேரடியாக இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தல். இலங்கையில் இருந்து தாக்கும் தொலைவில் தான் நமது அணுமின் அமைப்புகளும் மற்ற சில முக்கிய கேந்திரங்களும் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
 சமிபகாலமாக  சீனா இந்தியாவை மாநிலங்களவில் சிறுசிறு நாடுகளாக துண்டாட நினைக்கிறது . அப்படி அஸ்ஸாம் , அருணாச்சல், காஷ்மீர் என்று துண்டாடும் பட்சத்தில் சீனவின் நேரடி போட்டியான இந்தியாவை இல்லாமல் செய்துவிடமுடியும். அதன் ஒருபகுதியாகத்தான் காஷ்மீர் மக்களுக்கு தனி பாஸ்போர்ட் விசா என்று மறைமுக தாக்குதல் மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளுகிறது.
         உள்நாட்டுக்குள் வெங்க விலை ஏறுவதே, ஆட்சி யாளர்களுக்கு தாமதமாகத்தான் உறைக்கும் நிலைமையில் தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் வந்தபின் தான் விழிப்பார்கள் என்பதே உண்மை.
இதுமட்டும் அல்லாமல் பாகிஸ்தான் போர் வீரர்களுக்கு இலங்கையின் வடபகுதியில் கொரிலா போர் பயிற்சி பாசறைகளை அமைக்க இருப்பதும்  கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். 
          ஆக இந்தியாவின் அயல்நாட்டு கொள்கையானது ,( இலங்கை விசயத்தில்) நம் நாட்டின் நலனுக்கும் பாது காப்புக்கும் எதிரானது என்பதை உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை.


என்ன? சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ளுவது என்ற சொலவடை நினைவுக்கு வருகிறதா ?