tag:blogger.com,1999:blog-7317272494787618602024-02-19T11:32:47.489+05:30இனியதமிழ்Rajkumar Rhttp://www.blogger.com/profile/08686505385928166241noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-731727249478761860.post-40880481721321311472014-05-05T19:08:00.000+05:302014-05-05T19:08:15.622+05:30தமிழகத்தை வளமாக்க முதல் எட்டை எடுத்து வைக்கப்போவது யார் ?<div align="justify">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfkG03pO1wMebcVVUhhhpWuW3LrdKvg9SDjGuL91rxLj5Xg5EEkrtqHlSb2seJUTJ1_DKcfhyphenhyphen6aJlAMRQLblbKIr-iE0Og9OCrV35pdgkLReZTHVYTs0NbaexVYVStzrJnUJe7Vl4I_XE/s1600/pic1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="கருவேல மரங்கள்" border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfkG03pO1wMebcVVUhhhpWuW3LrdKvg9SDjGuL91rxLj5Xg5EEkrtqHlSb2seJUTJ1_DKcfhyphenhyphen6aJlAMRQLblbKIr-iE0Og9OCrV35pdgkLReZTHVYTs0NbaexVYVStzrJnUJe7Vl4I_XE/s1600/pic1.jpg" height="300" title="தமிழகத்தை வளமாக்க முதல் எட்டை எடுத்து வைக்கப்போவது யார் ?" width="400" /></a></div>
தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை ஆண்டவர்களும் சரி ஆள்பவர்களும் சரி, மக்களுக்காகவே வாழ்வதாக சொல்லிகொள்ளும் அரசியல் வாதிகளும் சரி மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாய் ஒரு தொலைநோக்கு பார்வையில் செயல் படவில்லை என்பதே உண்மை ! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தமிழகம் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறதே தவிர அரசும் அரசு இயந்திரமும் ஏன் சமூக ஆர்வலர்களும் சரி இவற்றை பற்றி கவலை படுவதில்லை என்பதே வருத்தமான உண்மை !!<br />
<br />
எப்பொழுதாவது தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்து உள்ளீர்களா ? அப்படி பயணம் செய்து இருந்தால் உங்களுடனே பயணம் முழுவதும் பசுமையாய் தொடர்ந்து வரும் கருவேல மரங்களை கவனித்து இருக்க தவறி இருக்க மாட்டீர்கள். கோடையிலும் பசுமை போங்க நிழல் விரிக்கும் அவைகளை பார்த்து ஆச்சரியப் பட்டு இருப்பீர்கள். கோடையிலும் பசுமையாய் இருக்கும் இந்த கருவேல மரங்கள் உண்மையில் ஆட்சியாளர்களின் அலட்சியம் சமூக ஆர்வலர்களின் கவன குறைவு இவற்றின் ஒட்டு மொத்த அடையாளம் தான் அவை. சுருங்க சொல்வதனால் வறட்சி எனும் சுடுகாட்டில் தமிழகத்தின் தலைமாட்டில் ஊன்றப்பட்ட மரம்தான் இந்த கருவேல மரங்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1zVnhuyVrQwGKU0F2q4TMdA9nRUyG9TAmoc-HrO6Y6XUtWVSg9OtzkbbZ_t_wPaBkvhb5L4dzPIG2TTcwZcbBuNnzZ9M48hlleD06Ebwo6ScOeP64UHY9TbMWweBWVFT3VimMrR0Qwnc/s1600/pic2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img alt="கருவேல மரங்கள்" border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1zVnhuyVrQwGKU0F2q4TMdA9nRUyG9TAmoc-HrO6Y6XUtWVSg9OtzkbbZ_t_wPaBkvhb5L4dzPIG2TTcwZcbBuNnzZ9M48hlleD06Ebwo6ScOeP64UHY9TbMWweBWVFT3VimMrR0Qwnc/s1600/pic2.jpg" height="400" title="தமிழகத்தை வளமாக்க முதல் எட்டை எடுத்து வைக்கப்போவது யார் ?" width="300" /></a></div>
தொலைநோக்கு பார்வை என்பதே தமிழகத்தை நீண்ட நெடுங்காலமாக ஆண்டுவரும் ஆட்சியாளர்களிடம் இல்லை என்பதற்கு தமிழகம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கருவேல மரங்கள் என்று சொல்லப்படும் காட்டுக்கருவை மரங்களே சாட்சி. 1960 களில் தமிழகத்தின் வறட்சியை போக்கும் விதமாக இந்த மர விதைகள் ஆகாய விமானங்கள் மூலம் விமானத்தின் உதவியால் தூவப்பட்டன எனவும் மற்றொரு சாரார் இல்லை இல்லை இலவச மதிய உணவுக்காக அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட கோதுமையில் திட்டமிட்டே கலந்து அனுப்பப்பட்டது எனவும் கூறுவார். எது எப்படியோ அன்று ஊன்றப்பட்ட விஷ வித்து விஷமரமாய் தமிழகம் எங்கும் பல்கி பெருகி விட்டது.<br />
<br />
இந்த கருவை மரங்கள் கடும் வறட்சியை தாங்கக் கூடியவை, ஆழமாக நீண்டு செல்லும் வேர்கள் நிலத்தின் அடியே ஆழமாக சென்று ஒட்டுமொத்த நிலத்தடி நீரையும் உறிஞ்சி யெடுக்கக்கூடிய தன்மை வாய்ந்தவை. இம் மரங்களின் இலைகளோ காற்றில் நிறைந்து இருக்கும் ஈர ப் பதத்தை ஒட்டுமொத்தமாக உறிஞ்சி அருகில் இருக்கும் பிற பயிர்களின் வளர்ச்சியை பாதிப்பவை . மரத்தின் மேற் பகுதி தீயினால் கருக்கப் பட்டாலும் அடிமரத்தில் இருந்து மீண்டும் துளிர்க்க கூடியவை மொத்தத்தில் அவை பீனிக்ஸ் பறவை போன்றவை என்றால் மிகை இல்லை.<br />
<br />
இம்மரங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை அப்படியே ஈர்த்துக்கொள்வதால் மழை பெய்யும் வாய்ப்பு பெருமளவு குறைவதுடன் இருக்ககூடிய பயிர்களும் வறட்சி தாங்காது காய்ந்து கருகி விடும். இவ்வளவு தீமைகள் இம் மரங்களால் ஏற்படுவதை தெரிந்து கொண்ட கேரளா போன்ற அண்டை மாநிலங்கள் போர்கால அடிப்படையில் விரைந்து செயல் பட்டு முற்றிலுமாக தங்கள் மாநிலங்களில் இருந்து அகற்றி விட்டன. ஆனால் நம் தமிழகத்திலோ ஆட்சியாளர்களிடமும் சரி பொது மக்களாகிய நம்மிடமும் சரி ஏற்படவில்லை என்பதே வருத்தம் கலந்த உண்மை ! இந்த கருவேல மர ஒழிப்பு துவங்குமுன் சில திட்டமிடல் அவசியம் !<br />
<br />
முதலில் இந்த கருவேல மரங்களின் தீமைகள் குறித்த விழிப்பு உணர்வை மாநில மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.<br />
<br />
இந்த மரங்களை வெட்டி கரியாக்கி விற்பனை செய்யும் தொழில் ஈடுபட்டு உள்ள சில ஆயிரம் மக்களை மாற்று தொழிலில் ஈடுபடுத்த வேண்டும்.<br />
<br />
மீட்கப்படும் நிலத்தின் அளவு மற்றும் தன்மைகளை கருத்தில் கொண்டு விளை நிலங்களாகவும் நீர் ஆதாரங்களாகவும் மாற்ற வேண்டும்.<br />
<br />
மீட்டெடுக்க படும் நிலங்களின் பெரும்பகுதி நிலத்தடி நீரை அதிக படுத்தும் வகையில் நீர் நிலைகளாக மாற்றும் வகையில் திட்டமிடல் வேண்டும்.<br />
<br />
இவை அனைத்தும் முறையாக திட்டமிடப்பட்டு செயல் படுத்தப்பட்டால் இன்னும் கணிசமான அளவு விளைநிலங்கள் மீட்டெடுக்கப்படும், நீர் ஆதாரங்கள் அதிகரிப்பதனால் வேளாண்மை சிறப்படையும், நீர் மேலாண்மையில் முன்னேற்றம் ஏற்படும் !<br />
<br />
இதற்கான முதல் எட்டை எடுத்து வைப்பவர் யார் ? </div>
Rajkumar Rhttp://www.blogger.com/profile/08686505385928166241noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-731727249478761860.post-72374912858633899982014-05-04T14:28:00.002+05:302014-05-04T14:28:26.976+05:30கருவேலமரங்களும் அரசியல் வா(வியா)திகளும் !<div align="justify">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCIy6eOte_LB3lldlGQBb3S_lM_OP-mt5c-Pz08BRrHUie3OngAtNUtBRjYD_PrUGOw0_FGjyc5v3NWlrElwOw0BT_80F_GE323xGW4aS0fX18wmwEUWOKbfu0LweI0ObVJ-tJOZsguF4/s1600/corruption.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="அரசியல் வியாதிகளும்" border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCIy6eOte_LB3lldlGQBb3S_lM_OP-mt5c-Pz08BRrHUie3OngAtNUtBRjYD_PrUGOw0_FGjyc5v3NWlrElwOw0BT_80F_GE323xGW4aS0fX18wmwEUWOKbfu0LweI0ObVJ-tJOZsguF4/s1600/corruption.jpg" height="257" title="கருவேலமரங்களும் அரசியல் வா (வியா)திகளும் !" width="400" /></a></div>
நமது அரசியல்வாதிகளும் தமிழகம் முழுவதும் செழித்து வளர்ந்து இருக்கும் காட்டு கருவேல மரங்களும் ஒன்று என்றால் மிகை இல்லை!
காட்டு கருவேல மரங்கள் தான் இருக்கும் இடத்தில் தனது வேர்களை வெகு ஆழத்துக்கு பரப்பி தனக்கு தேவையான நீர் ஆதாரத்தை உறிஞ்சி எடுத்துக் கொள்வதுடன் காற்றில் நிறைந்துள்ள நீரையும் எடுத்துக்கொள்ளும்.<br />
<br />
அரசியல் வா(வியா)திகளும் அப்படிதான், அரசியலில் நுழையும் போது சைக்கிள் வாங்கவே துப்பில்லாமல் இருப்பவன், நுழைந்த சில மாதங்களிலேயே மக்கள் நல திட்டங்களில் திருடுவது முதலாளிகளுடன் சேர்ந்து இயற்கை ஆதாரங்களை சுரண்டுவது கூட்டு கொள்ளை அடிப்பது என்று விதவிதமாக திருவாளர் பொது ஜனத்தை மொட்டை அடித்து சுலபமாக,வெகு விரைவில் தெருகோடியில் இருந்தவன் கோடிகளில் புரள ஆரம்பிக்கும் மாயம் அதுவும் உடனடியாக நடைபெறும் வித்தை இந்தியாவில் மட்டுமே காணமுடியும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjh3Qxkg2ED4-U2IKyyHcYJh09W6ngV9Fyjjx8kdPdxmb9jxgJGXnwPohtUkjc0zeqVabWxvZklr7Z-DdtgHaATIyQFMMXRbjt_s70bCAjXXT9XmwmikHOb0z77d7fw5PtAIdAS7NVFt-s/s1600/thorn.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="கருவேலமரம் " border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjh3Qxkg2ED4-U2IKyyHcYJh09W6ngV9Fyjjx8kdPdxmb9jxgJGXnwPohtUkjc0zeqVabWxvZklr7Z-DdtgHaATIyQFMMXRbjt_s70bCAjXXT9XmwmikHOb0z77d7fw5PtAIdAS7NVFt-s/s1600/thorn.jpg" height="300" title="கருவேலமரங்களும் அரசியல் வா (வியா)திகளும் !" width="400" /></a></div>
வளர்ந்த நாடுகளில் அங்கு இங்கு என்று ஊழல்கள் நடைபெறாமல் இல்லை ஆனால் அவர்கள் எல்லாம் மக்கள் நலம் சார்ந்த திட்டங்களில் கை வைப்பது இல்லை, நடை பெறும் ஊழல்கள் யாவும் அன்னிய நாடுகள் தொடர்புடைய இறக்குமதி மற்றும் ஆயுத பேரம் போன்றவையாய் மட்டுமே இருக்கும் .
ஆனால் இங்கு மட்டுமே எல்லா மக்கள் நல திட்டங்களிலும் கொள்ளை அடிக்கும் இழிந்தவர்கள் நிறைந்துள்ளர்கள்.<br />
<br />
இவ்வளவு ஊழல் அரசியல் வாதிகள் நாடுமுழுவதும் நிறைய என்ன காரணம் ? பொதுமக்களாகிய நாம் தான் நாம் மட்டுமே தான் காரணம் !
இன்றைய மக்கள் மனோபாவம் மிகவும் மாறியுள்ளது , ஆம் என் வீடு சுத்தமாக இருந்தால் போதும் என்று நினைத்து சாலையில் தன் வீட்டு குப்பையை கொட்டும் மனோபாவம் தான் அதிகம்.<br />
<br />
ஆக பொது விஷயங்களில் ஒரு நிலையும் தன் சொந்த விஷயங்களில் ஒருநிலையும் என ஒரே பிரச்சனைக்கு இரு வேறு அணுகுமுறை கொண்ட பொதுமக்களாகிய நாமே அனைத்துக்கும் மூல காரணம்.
ஊழலை பொறுத்த அளவில் மக்கள் மாறாதவரை அரசியல் வியாதிகளை மாற்ற முடியாது அரசியல் வியாதிகள் மாறாதவரை நாடும் நாட்டு மக்களும் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கமுடியாது !!!
</div>
Rajkumar Rhttp://www.blogger.com/profile/08686505385928166241noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-731727249478761860.post-71710676095579108882012-11-10T10:47:00.002+05:302012-11-10T10:47:32.906+05:30மக்கள் நல அரசு ???
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFfb3CRfsDjUIfxXes1QlHKEWtGprSinjH6Lgz7swEw0SjIY6Y9259fKpHc9jPayGmuJUYOfGZk8uliZDc9MrDs4IhyF1TIPHJ3RnHyJMJjZbwWZUSzPZLqCuCL4pKG3jkeZspluxp-zM/s1600/welfare.jpg" imageanchor="1" style="clear:right; float:right; margin-left:1em; margin-bottom:1em"><img border="0" height="165" width="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFfb3CRfsDjUIfxXes1QlHKEWtGprSinjH6Lgz7swEw0SjIY6Y9259fKpHc9jPayGmuJUYOfGZk8uliZDc9MrDs4IhyF1TIPHJ3RnHyJMJjZbwWZUSzPZLqCuCL4pKG3jkeZspluxp-zM/s320/welfare.jpg" /></a></div> இந்த தலைப்பு கேள்வி பட்ட வார்த்தைகளாய் தெரியுது இல்லையா ? ஆம் நமது மத்திய மாநில அரசுகள் மக்கள் நல அரசாக இந்திய அரசியல் அமைப்பு படி செயல் பட வேண்டும் ஆனால் உண்மையில் அப்படி செயல் படுகின்றனவா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். இன்றைய அரசுகள் எல்லாமே ஒரு லாப நோக்கோடு செயல்படும் தொழில் நிறுவனம் போலவே செயல்படுகின்றன. மக்கள் நலம் என்ற வார்த்தையை அதன் பொருளை மறந்து தம் நலம் தம் மக்கள் நலம் என்ற நோக்கிலேயே செயல்படுகின்றன. மக்களின் தேவைக்கு மட்டுமே அரசு நிர்வாகம் என்ற நிலை மாறி அரசின் நலத்திற்கும் வசதிக்குமே மக்கள் வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுத்தப் படுகிறார்கள். உதாரணம் சொல்ல வேண்டுமானால் மின்கட்டண உயர்வு பேருந்து கட்டண உயர்வு இவற்றை குறிப்பிடலாம்.
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuQHpmhxoDOaeDyVY4G_FZ3v4IG35YPdICuboAbHyM00Bof9oqDEj96M8k4JGUKFsl_OwN7n1VZryI7G2PX8GyBReSyQ_a_EpH-HMhZke_TbY73rSERjmo9nEdfpUM99tHZ1aBVHfsvbI/s1600/welfarstate.jpg" imageanchor="1" style="clear:right; float:right; margin-left:1em; margin-bottom:1em"><img border="0" height="205" width="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuQHpmhxoDOaeDyVY4G_FZ3v4IG35YPdICuboAbHyM00Bof9oqDEj96M8k4JGUKFsl_OwN7n1VZryI7G2PX8GyBReSyQ_a_EpH-HMhZke_TbY73rSERjmo9nEdfpUM99tHZ1aBVHfsvbI/s320/welfarstate.jpg" /></a></div>ஆளுவோர் மக்கள் நலனுக்காக ஆளுவதில்லை தங்கள் 5 வருட ஆட்சி காலம் தங்கள் எண்ணப்படி அமைய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. தற்போதைய கல்வி கொள்கை ஆகட்டும் , ஆன்லைன் வர்த்தக அனுமதி ஆகட்டும், பொது துறை பங்குகளை விற்பனை செய்வதாகட்டும் எல்லாமே தங்களின் சுய லாப நோக்கு அல்லது தாம் சார்ந்தவர்களின் நலம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல் படுகிறார்கள் என்பதே உண்மை. தனது அன்றாட வயற்றுபட்டுக்கே தன் உழைப்பை விற்க வேண்டியிருக்கும் அன்றாடம் காய்ச்சி உண்மையில் தாம் ஏமாற்ற படுவது தெரிந்தும் கையறு நிலைமையில் எதுவும் செய்ய சக்தியற்று விரக்தியின் உச்சத்தில் நிற்கிறான் என்பதே உண்மை. மக்களின் அறிவை வளர்க்க பயன்பட வேண்டிய கல்வி, முதலாளிகளால் கடை சரக்காய் விற்கபடுகிறது. விற்கப்படும் கல்வியும் மக்களை பணம் சம்பாதிக்கும் எந்திரமாக மட்டுமே உருவாக்குகிறது. மக்கள் நலனில் மிக முக்கியமான "ஆரோக்கியம் " பெரு முதலாளிகளின் மருத்துவ மனைகளுக்கு குடிபெயர்ந்து விட்டன. எந்த ஒரு அரசியல் வாதியோ, உயர் அதிகாரிகளோ அல்லது அவர்கள் குடும்பத்தினரோ அரசு பொதுமருத்துவ மனையில் மருத்துவ சிகிச்சை பெறுகி றார்களா அல்லது அரசு கல்வி நிறுவனத்தில் தான் படிக்கிறார்களா ? அவர்களுக்கு தெரியும் தங்கள் நிர்வாகம் பற்றி.
-தொடரும் -Rajkumar Rhttp://www.blogger.com/profile/08686505385928166241noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-731727249478761860.post-67874908816513988002011-12-03T12:24:00.001+05:302012-01-03T01:36:29.477+05:30காவல் துறை சீரமைப்பே ஊழலை நசுக்க உடனடி தேவை !!!<div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsmLl5epnRu8oXfGdKLfd1jOi7_VkZMODN7GWgPCFUzRqy-47uE1jGGYrAgz-r9kZxb_qF_Ju9GaMfc_5_xoBvYxIWanTRiue-EGxooN1HRmjRCNTFBltzNtAsn93wJfHLowO8y1arLGw/s1600/badge.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsmLl5epnRu8oXfGdKLfd1jOi7_VkZMODN7GWgPCFUzRqy-47uE1jGGYrAgz-r9kZxb_qF_Ju9GaMfc_5_xoBvYxIWanTRiue-EGxooN1HRmjRCNTFBltzNtAsn93wJfHLowO8y1arLGw/s400/badge.jpg" width="352" /></a></div>ஊழலுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எழுச்சியுடன் போராட முற்படும் இக்கால கட்டத்தில், இன்றைய அரசியல் சமுதாய சுழலில் இந்த மாற்றம் வருவது சாத்தியமா என்ற எண்ணம் நம் மனங்களில் ஏற்படாமல் இல்லை. உண்மையில் ஊழலை அறவே ஒழிக்க வேண்டும் என்றால் நமது அரசு இயந்திரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்தால் அன்றி ஊழல் அற்ற சமுதாயம் ஏற்படுத்த முடியாது என்பது உள்ளங்கை நெல்லி கனி. இந்த மாற்றங்கள் முதலில் காவல் துறையில் இருந்தே தொடங்க வேண்டும்.<br />
<br />
ஆள்வோரின் அடிவருடிகளாக, ஆள்வோரின் கைப்பாவைகளாக செயல்படும் காவல்துறையின் நிலைமை பரிதாபம். எவ்வளவோ காலம் போராடியும் சொந்தமாக ஒரு சங்கம் கூட துவங்க முடியாத நிலைமையில் அவர்களால் எப்படி நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட முடியும். 2001 களில் உச்ச நீதிமன்றம் ஒரு மிக முக்கியமான விஷயத்தை கோடிட்டு காட்டியது அதன் படி காவல் துறையில் என்ன என்ன மாற்றங்கள் உடனடியாக தேவை என்பதை பட்டியல் இட்டு உடனடியாக நிறைவேற்ற ஆலோசனை வழங்கியது. <br />
<br />
ஆனால் துர்அதிஷ்டவசமாக இன்றுவரை எந்த ஒரு மாநிலமும் அதனை ஏற்று முழுமையாய் செயல்படுத்த முன்வரவில்லை காரணம்? காவல்துறை சுதந்திரமாய் நேர்மையாய் செயல்பட ஆரம்பித்துவிடும் அப்படி செயல் பட ஆரம்பித்துவிட்டால், ஊழல் செய்வோருக்கு காவலாய் எவலராய் நிற்கும் காவல்துறை மக்கள் பணியே மகேசன் பணி என்று செயல் பட ஆரம்பித்துவிடும். விளைவு ஊழலின் இருப்பிடமாம் அரசியல் சாக்கடை சுத்த படுத்தப்படும்.<br />
<br />
இன்றைய காலகட்டத்தில் இதற்கு சாத்தியம் இல்லை என்பதே வருத்தம் கலந்த உண்மை !!! ஒருவேளை ஒருவிழிப்புணர்வு ஏற்பட்டு யாரேனும் இதற்கும் நீதி மன்றத்தை அணுக வேண்டி இருக்குமோ என்னவோ ?!?Rajkumar Rhttp://www.blogger.com/profile/08686505385928166241noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-731727249478761860.post-61255823046304308242011-03-17T12:00:00.002+05:302012-01-03T01:40:19.695+05:30உழைப் பாளியை அதிகம் சுரண்டுவது முதலாளி களா அல்லது ஆள்வோரா ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0GdgVRWtaSk8vcANF6gDOdI3XhMCiN6dxeUHfSSZtXKyJmkXtreN0pk9k1WsLNLFVxWSr8AOKhTuvDXXHO1_IdDM9MoEmtmfc__eXhn9Net_FURCyp5DydPtYks3ssC4dtpCkuICWO6Y/s1600/expoliting.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="372" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0GdgVRWtaSk8vcANF6gDOdI3XhMCiN6dxeUHfSSZtXKyJmkXtreN0pk9k1WsLNLFVxWSr8AOKhTuvDXXHO1_IdDM9MoEmtmfc__eXhn9Net_FURCyp5DydPtYks3ssC4dtpCkuICWO6Y/s400/expoliting.JPG" width="400" /></a></div> நம் நாட்டில் மட்டுமல்லாது இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் விஷயம் பொதுவானது. என்று மனிதன் நாடோடி வாழ்க்கையை விட்டுவிலகி வசதியான நாகரிக வாழ்கை வாழத் தலைப்பட்டானோ அன்று துவங்கிய இது இன்றுவரை முடிவில்லாது தொடர்கிறது. இன்றைய வாழ்க்கை முறையில் மனிதனை இரு வர்க்கமாக மட்டுமே பிரிக்கலாம். ஒன்று சுரண்டுவோர் மற்றொன்று சுரண்டபடுவோர். இந்த இரண்டும் மாறாத இரு பிரிவுகள். முதலாளித்துவ கட்டமைப்பில் முதலாளி உழைப்பளியை சுரண்டும் நிலை இருந்தது. தொழிலாளி வர்க்க அமைப்பில் உழைப்பாளி பணம் படைத்தவரை கட்டுப்படுத்தும் நிலைமை இருப்பினும் இரண்டிற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. இந்த விஷயத்தை உலக அளவில் பார்ப்பதை விட நம் நாட்டளவில் பார்ப்பது எனக்கும் உங்களுக்குமான புரிதலுக்கு எளிமையாய் இருக்கும் என்பதால் நாம் நாட்டளவில் மட்டும் இதை பார்போம்.<br />
<br />
நம் நாடு சுதந்திரம் அடையும் பொழுது இந்த வேறுபாடுகள் பெரியதாக இருந்தன. இந்த வேறுபாட்டை களைய அரசாங்கம் இந்த பிரச்சனையை கையில் எடுத்தது அதுவரையில் ஒரு இனத்தோடு மட்டும் போராடி வந்த சுரண்டபடுவோன் அதன் பிறகு அரசையும் எதிர்கொள்ள வேண்டி வந்தது. புரியவில்லையா? சரி புரியும் படி சொல்கிறேன்.<br />
<br />
முதன் முதலில் இந்த வேறுபாடுகளை களைய அரசு அரசுடமை , மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற வற்றில் இறங்கியது. துவக்கத்தில் அரசுஉடமை ஆக்கப்பட்ட வங்கிகளை மட்டும் உதாரணத்திற்கு பார்போம். அன்று அரசின் நோக்கம் சுரண்டலுக்கு எதிராக இருந்தது, எனவே அரசே கையகபடுத்தி சுரண்டலுக்கு எதிரான பணியை துவங்கியது. ஆனால் இன்று நிலைமை என்ன ?<br />
இன்று இதே வங்கிகள் (அரசு ) மற்ற்றொரு சுரண்டும் இனமாக மாறிவிட்டது தான் சமுக அவலம். மக்கள் வசதிக்காக என்று துவங்கப்பட்ட வங்கிகள் வசதிகளை கொடுத்து அதிகம் சுரண்டுவது தான். இன்றைய அளவில் வங்கி கணக்கு இல்லாதோரே இல்லை என்பதால் இது எளிதில் புரியும் என நினைகிறேன்.<br />
ஒரு நிலையில் அரசு நிர்வாக செலவுகளுக்காக மற்றும் மேம்பாடுகளுக்காக வரி விதிக்கப்பட்டது. இன்று எதில் எல்லாம் வரி போட்டு அரசு வருவாய் மேம்படுத்தலாம் என்று ஆராயவே குழுக்களை அமைக்கும் அவலம் காண முடிகிறது.<br />
முன்னாளில் நிலக்கிழார்கள் தங்கள் உழை ப்பாளிகளை அடிமைப்படுத்த பயன் படுத்திய சாராய கடைகள் இன்று அரசாங்கத்தின் காமதேனுவாய் ,உழைப்பவன் உழைப்பால் வந்த வருமானத்தை சுரண்டுகின்றன.<br />
<br />
இந்த சுரண்டல் பட்டியல் முடிய வில்லை...... ஆனால் தற்காலிகமாக முடித்து வைக்க படுகிறது </div>Rajkumar Rhttp://www.blogger.com/profile/08686505385928166241noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-731727249478761860.post-49005861879427183042011-02-13T09:23:00.002+05:302012-01-03T01:30:14.331+05:30வலை பதிவாளர்கள் மேல் அரசின் அறிவிக்காத தணிக்கைமுறை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9z0QdYCRDHeGP00533ufWN-GPTR3aoBQW8ls_RlPEMGCXvVqTnjdDJq9eWR79-iVlEg3L8CioP9PmXwosroaZ1QO3KQM6xqV4h8CZaRpT9K7tGx7L8tSrt-YmKBZo40wR3-_pJMVeUsc/s1600/banned.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9z0QdYCRDHeGP00533ufWN-GPTR3aoBQW8ls_RlPEMGCXvVqTnjdDJq9eWR79-iVlEg3L8CioP9PmXwosroaZ1QO3KQM6xqV4h8CZaRpT9K7tGx7L8tSrt-YmKBZo40wR3-_pJMVeUsc/s400/banned.jpg" width="400" /></a></div>சீனாவை பொறுத்தவரை இன்டர்நெட் பயன்பாடு என்பது தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட ஒன்று என்பதால் அதுகுறித்த அரசின் அணுகுமுறை என்பது வெளிப்படையான ஒன்று எனவே மாற்று கருத்துக்கோ, கேள்விகளுக்கோ அங்கு இடமில்லை , ஆனால் சமீப காலமாக இந்தியாவில் இன்டர்நெட் மற்றும் பதிவாளர்கள் (bloggers) மீது மறைமுகமாக தணிக்கை முறை ஏவி விடப்பட்டு உள்ளதாகவே தோன்றுகிறது. <br />
முதலாவதாக பதிவாளர்களின் paypal கணக்குகளின் மீது கடுமையான சட்ட திட்டங்கள் ஏவி விடப்பட்டன. அதன்படி பதிவாளர்கள் டாலர்களில் சம்பாதிக்கும் அன்னியசெலாவணி அப்படியே இந்திய வங்கி கணக்குக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகள் ஏவிவிடபட்டுளன.<br />
சமீபகாலத்தில், மத்திய மாநில அரசுகளை பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகள் விமர்சிததைவிட வலை பதிவாளர்கள் விமர்சித்ததுதான் அதிகம். ஆம் வலைபதிவாளர்களின் விமர்சனம் படித்தவர்களை நேரடியாக சென்றடைந்தது. அதன் விளைவும் அனைவரும் அறிந்ததே. இதை தாங்கிக்கொள்ள முடியாத ஆட்சியாளர்களின் கோபம் வேறுவிதமாக வலை பதிவாளர்களை தாக்குகிறது . இந்த சிலமாதங்களில் பெரும்பாலான google blogspot blogs திறக்கமுடியாத நிலைமையில் உள்ளன. ISP எனப்படும் service provider களிடம் மிகவும் போராடியே அவைகளை வலை பின்னலில் திறக்க செய்ய வேண்டிஉள்ளது.<br />
<br />
இதில் அதிசயமான ஒன்று இன்றுவரை <a href="http://www.google.com/">google</a> இதுகுறித்து எந்த ஒரு கேள்வியும் எழுப்பாததுதான். Google அமைதியை உடைக்கும் போதுதான் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். கூடிய சீக்கிரம் வரவேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பமும் கூட!!!!!!!<br />
<br />
</div>Rajkumar Rhttp://www.blogger.com/profile/08686505385928166241noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-731727249478761860.post-44378174197589438382011-02-10T11:10:00.001+05:302012-01-03T01:47:59.626+05:30ஊழல் குற்றசாட்டுகளுக்கு தண்டிக்கப்படவேண்டியவர்கள் அரசியல் வாதிகளா ? அதிகாரிகளா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEik0YnZghTVjBURbPOq33Y9d-e5n9p7pODneAZdXWVZm0sHEerdjT7E6t7-jxYIP8AV8mWIOWQqPMA67uKEwWydz8J2a4JWttKyWSQSM5ah26qNrKYfMT_DvtHI-uxDJRfLRw96b917xRc/s1600/corruption.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="285" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEik0YnZghTVjBURbPOq33Y9d-e5n9p7pODneAZdXWVZm0sHEerdjT7E6t7-jxYIP8AV8mWIOWQqPMA67uKEwWydz8J2a4JWttKyWSQSM5ah26qNrKYfMT_DvtHI-uxDJRfLRw96b917xRc/s400/corruption.jpg" width="400" /></a></div> சமீப காலகட்டத்தில் இந்தியாவில் அரசியல் வாதிகளுக்கு எதிரான ஊழல் குற்ற சாட்டுகள் கவலை யளிப்பதாக உள்ளன. இதில் ஒட்டுமொத்த அரசியல் வாதிகளும் மக்களை கோமாளிகளாகவும் ஏமாளி களாகவும் எண்ணி தங்கள் அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவது வெட்ககேடான ஒன்று.<br />
அலை கற்றை ஊழல் விசயத்தில் அரசியல் வாதிகளின் அணுகுமுறையை சற்று கூர்ந்து கவனித்தால் விஷயம் புரியும். எதிர் கட்சிகள் விசாரணை கோரி போராட்டம் நடத்தினால் ஆளும் கட்சி பதிலுக்கு விசாரணை நடத்தலாம் ஆனால் முந்தைய உங்கள் ஆட்சி காலத்தையும் சேர்த்து விசாரணை செய்யலாம் என்கின்றனர். அப்படியானால் யாருமே நேர்மையானவர்கள் இல்லை என்பது தானே உண்மை!<br />
இவ்வளவு துணிச்சலாக அரசியல் வாதிகள் குற்றம் புரிய உதவிசெய்வதும், துண்டுவதும் யார் ? சந்தேகமே இல்லாமல் அரசு பணியில் முதல் நிலையில் உள்ளவர்கள் தான். எழுத படிக்கச் தெரியாத ஒரு அரசியல்வாதி பதவிக்கு வரும் பொழுது ஒன்றுமே தெரியாமலே பதவி ஏற்கிறான்.ஆனால் அவனுக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகள் ஊழல் செய்வது எப்படி என்றும், சட்டத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்றும் பாடம் எடுக்காத குறையாக கற்பிகின்றார்கள். ஆக பதவி ஏற்ற கொஞ்ச காலத்திலே அரசியல் வாதிகள் மிக திறமை வாய்ந்த ஊழல் பெருச்சாளிகளாக அதிகாரிகளின் தயவால் மாறிவிடுகின்றனர். எனவே அரசியல் வாதிகளை தண்டிப்பதை விட அதிகாரிகளை தண்டிப்பதே ஊழலை தடுக்க பெரிதும் உதவும்.<br />
நீங்கள் அறிந்திருப்பீர்கள், பெரும்பாலான ஊழல் தொடர்பான திட்டங்களின் கோப்புகள் நீதி விசாரணைக்கு வருமுன்னரே காணமல் போய்விடுவதான் காரணம் தெரியுமா?<br />
சம்மந்தப்பட்ட கோப்புகளில் நேர்மையான அதிகாரிகள் திட்டங்களுக்கு எதிரான குறிப்புகள் எழுதி இருப்பார்கள் அந்த கோப்புகள் அப்படியே சமர்ப்பிக்க படுமானால், ஊழல் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு துணை போனவர்களும் மாட்டிகொள்வார்கள் என்பதாலேயே மறைக்க பட்டுவிடுகின்றன.<br />
ஆக எல்லா விதத்திலும் அதிகாரிகளின் பங்கு ஊழலில் அதிகம் என்பதால் ஊழலை கட்டுபடுத்தவேண்டுமானால் துணைபோகும் அதிகாரிகளை முதன்மை குற்றவாளிகளாக அறிவித்து தண்டனைக்கு உட்படுத்தினால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்.</div>Rajkumar Rhttp://www.blogger.com/profile/08686505385928166241noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-731727249478761860.post-67848168275264490222011-02-09T12:52:00.001+05:302012-01-03T01:56:13.924+05:30இலங்கை வரும் நாட்களில் இந்தியாவின் மிகபெரும் அச்சுறுத்தல் !!!!!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHU9lC_vM3fPdY_GRn5D23baFvCo7L8FHE-5FfGhRZpwMymz2o6pqjeaGQy66Z-OGWCmN3_2_CwyzFdmGjgtluJSvdh962OFqcO9yPb4A1e_y6InI_4CloxcZVaO6GBmbIXGF0pES0bm0/s1600/srilanka.gif" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="182" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHU9lC_vM3fPdY_GRn5D23baFvCo7L8FHE-5FfGhRZpwMymz2o6pqjeaGQy66Z-OGWCmN3_2_CwyzFdmGjgtluJSvdh962OFqcO9yPb4A1e_y6InI_4CloxcZVaO6GBmbIXGF0pES0bm0/s320/srilanka.gif" width="320" /></a></div> நமது நாட்டை பொறுத்தவரை தென்பகுதி அதுவும் குறிப்பாக தமிழகம் என்றுமே அமைதி பூங்கா வாகத்தான் திகழ்ந்து வந்தது.ஆனால் இலங்கை வாழ் தமிழர்களின் முதுகில் இன்றைய ஆட்சி யாளர்கள் என்று குத்தினார்களோ; அன்றே நாட்டின் தென்பகுதி பாதுகாப்பு கேள்விகுறியாகி விட்டது. இலங்கை தமிழர்களின் போராட்டத்தை நசுக்க இந்தியர்களின், குறிப்பாக தமிழின துரோகிகளின் ஆதரவை பயன்படுத்திகொண்ட சிங்கள ஆட்சியாளர்கள் அதே சமயம் சீன பாகிஸ்தான் உடனான நட்பை கொல்லைபுறம் வழியாக பலப்படுத்தி கொண்டனர் .<br />
தமிழ் போராளிகளை அழித்து ஒழிக்க ஆயுத உதவிகளை தாரளமாக செய்த சீனா தெற்கு இலங்கையில் ஒரு துறை முகத்தை நவீன படுத்துகிறது . நமது ஒட்டு பொறுக்கிகள் அவர்கள் துறைமுகத்தை அவர்கள் நவீன படுத்தினால் என்ன என்று கேள்வி கேட்பார்கள் , ஆனால் பாதுகாப்பு துறை வல்லுனர்களின் கருத்துப்படி மிக குறைந்த அவகாசத்தில் அந்த துறைமுகத்தை ஒரு அதிநவீன கப்பல் படை தளமாக சீனா வால் மாற்ற முடியும். இந்தியாவின் வடக்கில் அத்துமீறும் சீனா தற்போது தெற்கிலும் கால் பதிப்பது மிகவும் துரதிஷ்டவசமானது.இலங்கையில் சீனர்களின் நுழைவு நேரடியாக இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தல். இலங்கையில் இருந்து தாக்கும் தொலைவில் தான் நமது அணுமின் அமைப்புகளும் மற்ற சில முக்கிய கேந்திரங்களும் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.<br />
சமிபகாலமாக சீனா இந்தியாவை மாநிலங்களவில் சிறுசிறு நாடுகளாக துண்டாட நினைக்கிறது . அப்படி அஸ்ஸாம் , அருணாச்சல், காஷ்மீர் என்று துண்டாடும் பட்சத்தில் சீனவின் நேரடி போட்டியான இந்தியாவை இல்லாமல் செய்துவிடமுடியும். அதன் ஒருபகுதியாகத்தான் காஷ்மீர் மக்களுக்கு தனி பாஸ்போர்ட் விசா என்று மறைமுக தாக்குதல் மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளுகிறது.<br />
உள்நாட்டுக்குள் வெங்க விலை ஏறுவதே, ஆட்சி யாளர்களுக்கு தாமதமாகத்தான் உறைக்கும் நிலைமையில் தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் வந்தபின் தான் விழிப்பார்கள் என்பதே உண்மை. <br />
இதுமட்டும் அல்லாமல் பாகிஸ்தான் போர் வீரர்களுக்கு இலங்கையின் வடபகுதியில் கொரிலா போர் பயிற்சி பாசறைகளை அமைக்க இருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். <br />
ஆக இந்தியாவின் அயல்நாட்டு கொள்கையானது ,( இலங்கை விசயத்தில்) நம் நாட்டின் நலனுக்கும் பாது காப்புக்கும் எதிரானது என்பதை உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை.<br />
<br />
<br />
என்ன? சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ளுவது என்ற சொலவடை நினைவுக்கு வருகிறதா ?</div>Rajkumar Rhttp://www.blogger.com/profile/08686505385928166241noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-731727249478761860.post-76543256656663257952010-10-11T10:03:00.035+05:302012-01-03T02:00:00.844+05:30அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது எப்படி ?<div style="text-align: center;"><b>அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது எப்படி ?</b> </div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjJiZhbu4ZkmecojRyR17HmvC5R8QXlZkw_iq2n0R1y1sW3RQGxoHJNBkkdU5dZHFb7Y7-HoImYfwR768pj8Q74RfK9QK6jNnh_dQiImd9UpUG3NeAKEg1JY8S_uVQO2LVV1fQiH93UWw/s1600/schools.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="348" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjJiZhbu4ZkmecojRyR17HmvC5R8QXlZkw_iq2n0R1y1sW3RQGxoHJNBkkdU5dZHFb7Y7-HoImYfwR768pj8Q74RfK9QK6jNnh_dQiImd9UpUG3NeAKEg1JY8S_uVQO2LVV1fQiH93UWw/s400/schools.jpg" width="400" /></a></div> அரசு பள்ளிகளை பற்றி ஒரு தவறான இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால் ஒரு மட்டமான எண்ணம் மக்களிடையே மேலோங்கி நிற்கிறது என்பது மிகவும் உண்மை. இதற்கு யார் காரணம் அரசா? அரசியல் வாதிகளா? அல்லது மக்களா? என்று பகுத்து ஆய்வதுவே இந்த மடலின் நோக்கம்.<br />
<br />
நாட்டுகாக உழைப்பதாய் மார் தட்டிக்கொள்ளும் எத்தனை அரசியல் வாதிகளின் குழந்தைகள் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிகிறார்கள்? சரி அவர்கள் தான் போகட்டும் எத்தனை அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் குழந்தைகள் <iframe align="right" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=money0d58-20&o=1&p=8&l=bpl&asins=B001G60R5A&fc1=000000&IS2=1&lt1=_blank&m=amazon&lc1=0000FF&bc1=000000&bg1=FFFFFF&f=ifr" style="height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"></iframe><iframe align="right" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=money0d58-20&o=1&p=8&l=bpl&asins=1436994454&fc1=000000&IS2=1&lt1=_blank&m=amazon&lc1=0000FF&bc1=000000&bg1=FFFFFF&f=ifr" style="height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"></iframe>நகராட்சி பள்ளிகளில் படிகிறார்கள்? சரி அவர்களையும் விட்டுவிடலாம் அந்த பள்ளிகளில் பணிபுரியும் எத்தனை ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிகிறார்கள் ? வேதனையான உண்மை என்ன வென்றால் அவர்களின் குழந்தைகளே வேறு தனியார் பள்ளிகளில் படிகிறார்கள். ஆக அந்த ஆசிரியர்களுக்கே தங்களின் திறமையில் நம்பிக்கை இல்லையா? அல்லது அரசு, பள்ளிகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவது இல்லையா என்று பார்த்தோமானால் அரசு மற்றும் ஆசிரியர்களின் ஒட்டுமொத்த புறகணிப்பு தான் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.<br />
சரி இதை சரிப்படுத்தி கல்வி கூடங்களின் நிலைமையை மேம்படுத்த என்ன செய்யலாம் ?<br />
முதல் கட்டமாக அரசு பணிபுரியும் அனைவரின் குழந்தைகளும் அரசு பள்ளியில் தான் கல்வி பயில வேண்டும் என்பதை கட்டாய படுத்த வேண்டும் மீறி அவர்கள் தனியார் பள்ளிகளை படிக்கவைக்க விரும்பும் பட்சத்தில் அதே தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை அரசுக்கு செலுத்திவிட்டு தனியார் பள்ளியில் படிக்கவைக்க அனுமதிக்கலாம் இந்த மாற்று திட்டத்தினால் அரசுபள்ளிகளில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் குழந்தைகள் அதிகம் படிப்பதால் மாற்றந்தாய் மனபோக்கு மாறி பள்ளிகளின் தரம் மேம்படும்.Rajkumar Rhttp://www.blogger.com/profile/08686505385928166241noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-731727249478761860.post-82532436162237825882010-09-27T20:38:00.001+05:302012-01-03T02:05:20.800+05:30பள்ளி குழந்தைகளுக்கு தனி பயிற்சி(Tution) வரமா சாபமா ?<div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5LahDCwLiqBdDtqseNPYKSsbiFIz_i7bk3tZEE5fU63Rmw30oYjpXepMgT5rENkOKm6DYB4KE1LcmnVlVH5q4PtKvwWZFOLP6jOHkf28dgA4NF-uCvn0okKPrGT8Uh44rG2KPufYXPxc/s1600/edu.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5LahDCwLiqBdDtqseNPYKSsbiFIz_i7bk3tZEE5fU63Rmw30oYjpXepMgT5rENkOKm6DYB4KE1LcmnVlVH5q4PtKvwWZFOLP6jOHkf28dgA4NF-uCvn0okKPrGT8Uh44rG2KPufYXPxc/s400/edu.jpg" width="400" /></a></div> இன்றைய குழந்தைகளின் கல்வி தேடலின் பாதையை சற்று உற்று நோக்கினால் நமது மனம் கனத்து விடும். அதிகாலையில் முதுகில் புத்தக சுமையுடன் பள்ளிகிளம்பும் பிள்ளைகள் மாலையில் உடலும் மனமும் சோர்ந்து வீடு திரும்பும் குழந்தைகளை அத்துடன் விடுவதில்லை பெற்றோர் மறுபடியும் மாலையில் புத்தக மூட்டை முதுகில் ஏற்றப்பட்டு , சுமைதூக்கும் கழுதையாய் தனி பயிற்சிக்காய் ஒரு கூடுதல் பயணம்.<br />
குழந்தைகளை கொடுமை படுத்தும் இந்த அவலத்திற்கு யார் காரணம் ? கல்வி புதையல் தேடும் பெற்றோரா ? அல்லது காசுக்கு கடைவிரித்திருக்கும் கல்வி நிறுவனங்களா? விடை தேடி பயணித்தால் கல்விநிறுவனங்கள் மற்றும் பெற்றோரின் பேராசைக்கும் கனவுகளுக்கும் பலியாகி போனது குழந்தைகளின் நிகழ்காலம் மட்டுமல்ல ஆரோக்கியமான வருங்கால இந்தியா என்ற கனவும் தான் !<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div> சரி இந்த தனி பயிற்சிக்கு என்ன அவசியம் ? அப்படியானால் பள்ளிகளில் என்ன தான் சொல்லி கொடுகிறார்கள்? சரியான முறையில் பள்ளிகளில் சொல்லிகொடுபதிலையா ? அப்படி சொல்லிகொடுக்கதானே கட்டணமாக பெரும்தொகையை கொட்டிகொடுகிறோம் பிறகு ஏன் தனிபயிற்சி என்று என்ற பெற்றோரும் சிந்திப்பதும் இல்லை தட்டிகேட்பதும் இல்லை. பெற்றோரின் பொறுப்பின்மையும், மற்றபடி தட்டி கேட்க துணியாத மனோபாவம் மற்றும் பேராசையும் குழந்தைகளின் முதுகில் சுமையாய் அழுத்துவது தான் நிஜம்.<br />
இந்த அவலத்தில் பெற்றோரின் பங்கு அதிகம். எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தைகள் கல்விகற்றுகொள்ள அனுப்புகிறோம் கல்வி கற்றால் போதும் என்று எண்ணுவதில்லை அதற்கும் மேலாக முதல் மதிப்பெண், முதல் மாணவன், படித்து முடித்தவுடன் பெட்டிபெட்டியாய் வாங்க போகும் ஊதியம் மட்டுமே முதன்மையாய் கருதுவதின் விளைவு தங்களின் பிள்ளைகளின் முதுகில் ஏற்றிய சுமை.<br />
பள்ளிகளோ பணத்தில் குறியாய் இருக்கும் அளவு கல்வித்தரத்தில் குறியாய் இருபதில்லை.தகுதி குறைவான ஆசிரியர்கள், அதிக பளு நிறைந்த பாடத்திட்டம் இப்படி பல காரணங்கள். கட்டண குறைபிற்காக போராடும் பெற்றோரும், கூடுதல் கட்டணத்திற்காக போராடும் குழந்தைகளை பற்றி கிஞ்சித்தும் நினைப்பதில்லை.<br />
<br />
ஆக மொத்தத்தில் , குறைபாடு உடைய குழந்தைகள் மற்றும் மெதுவாக கற்கும் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமான இந்த தனிபயிற்சி ஏனைய குழந்தைகளுக்கு சாபமாய் போனது உண்மை. ஆனால் இந்த சுமை பெற்றோர்களும் சமுதாயமும் வலுகட்டாயமாக வலிந்து பிஞ்சுகளின் முதுகில் ஏற்றிய சுமை என்பது தான் வேதனை நிரம்பிய உண்மை .Rajkumar Rhttp://www.blogger.com/profile/08686505385928166241noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-731727249478761860.post-84177282832140718952010-06-22T20:29:00.000+05:302010-06-22T20:29:27.593+05:30அரசின் கல்விகடன்சமீபத்திய நாளிதழ் ஒன்றில் அரசின் கல்விகடன் பற்றிய அறிவிப்பை படித்தேன், படித்தவுடன் நிறைய முரண் பாடுகள் அரசின் கல்வி கொள்கைகளில் இருப்பதாக எனக்கு தோன்றியது அதன் பாற்பட்டதே இந்த அஞ்சல்.இந்திய அரசியல் அமைப்பு சட்ட படி அனைவருக்கும் பள்ளி கல்வி என்று சொல்கிறோம் ஆனால் அந்த பள்ளி கல்வியே செல்வந்தருக்கு வசதி படைத்த விதத்திலும், எளியவர்க்கு வசதிகள் இல்லாத அரசு பள்ளிகளிலும் கிடைப்பது மிகவும் வருந்த வேண்டிய ஒன்று தானே ?<br />
<br />
சட்டப்படி கல்வி நிறுவனங்கள் லாப நோக்கில் நிறுவப்பட கூடாது ஆனால் உண்மையில் நடப்பது என்ன இன்று வரை தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றிசல் போல கிளம்பிவிட்டன. அரசு அதிகாரிகளின் துணையுடன் அரசியல் வாதிகள் துவங்கும் நிறுவனங்களே அதிகம் இதே நிலை நீடித்தால் என்ன ஆகும் ? <br />
<br />
என்ன ஆகும் என்று நான் சொல்வதை விட சின்ன உதாரணம் ஒன்றை நான் குறிப்பிட்டாலே நீங்களே புரிந்துகொள்ள முடியும் . எண்பதுகளில் சுற்றுலா பேருந்தாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களை அனுமதியில்லாமல் கட்டண பேருந்து போல் பயந்து பயன்படுத்திய காலம் போய் இன்று தனி பேருந்து நிலையமே கட்டி தந்து உள்ளது அரசு. இதை போன்ற வணிக ரீதியான லாபநோக்கோடு தனியார் கல்வி நிறுவனங்கள் செயல் பட தான் இந்த கல்வி கடன் உதவி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை அல்லவா?. என்று தனியார் மயமாக்கல் மற்றும் சந்தை பொருளாதாரம் நமது நாட்டில் விதிக்கப்பட்டதோ அன்றே கல்வி வணிகத்துக்கு கொல்லைப்புறமாக அனுமதி வழங்கப்பட்டு விட்டது என்பதே உண்மை.<br />
இதன் விளைவு காலபோக்கில் என்னவாக இருக்கும் ? சாமானியனுக்கும் கடன் வசதி கிடைக்கும் என்று அமைச்சர்கள் ஆரவரிபர்கள் , சாமானியனும் கடன் கிட்டிய மகிழ்ச்சியில் திளைப்பான் ஆனால் உண்மையில் என்ன நடக்கும். சாமானியனின் வரிப்பணம் வங்கிகள் மூலம் அவனுக்கே கடனாக கொடுக்கப்பட்டு கல்வி வியாபாரிகள் கல்லாவில் கொண்டுபோய் சேர்க்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.<br />
ஆகமொத்தத்தில் கல்வி வியாபாரமாக மாற்றப்பட்டு விட்டது என்பதில் சந்தேகம் எஅதும் இல்லை, அப்படி வியாபாரமாக மறைமுகமாக அங்கிகாரம் கொடுத்துவிட்டால் என்ன நடக்கும் ? நமது கல்வி வியாபாரிகளின் துணையுடன் உலகளவில் கொள்ளை பணம் பங்கு போடப்படும் என்பதே உண்மை !!!!!!!!Rajkumar Rhttp://www.blogger.com/profile/08686505385928166241noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-731727249478761860.post-37175998520232491852009-12-07T12:47:00.000+05:302009-12-07T12:53:21.024+05:30உலக அளவில் வெள்ளம் பற்றிய புராண இதிகாச கதைகள்<strong><em>உலக அளவில் வெள்ளம் பற்றிய புராண இதிகாச கதைகள் </em></strong><br /><br />உலகத்தை விழுங்கிய பல்வேறு கதைகள் உலகஅளவில் பல்வேறு மொழிகளில் உள்ள இதிகாச புராண மற்றும் வாய் மொழி இலக்கியங்களில் காண கிடைகிறது. இவைகளை சற்று ஆராயும் நோக்கில் கூர்ந்து நோக்கினால், இவை ஒருவேளை கடந்த காலத்தில் உண்மையிலேயே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு இன மக்களின் மனதில் இருந்து எழுந்தவையா? என்ற கேள்வி எழுகின்றது, நாமும் சற்று விரிவாக அலசி பார்போமா? <br /> <br />பைபளின் பழைய ஏற்பாடு கூறும் <strong>நோவா</strong>வும் அவன் பயணம் செய்த பேழையும் பற்றிய கதை கிமு 8 மற்றும் கிமு 6 வது நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இஸ்ரேல் மற்றும் யூதேய நாட்டில் வழங்கிவந்தது அதன் மூலக்கதை மெசபடோமியா ( இன்றைய ஈராக் )வில் வழங்கி வருகிறது. <br /> <br />சுமேரியாவில் கிமு 300 இல் வழங்கிவந்த கதையும், <strong>ஆதி காவியமான கில்மேஷ் </strong>கூறும் வெள்ளம் பற்றிய தகவல்களை கூறுகிறது. <br /> <br />மத்திய அமெரிக்காவில் உள்ள <strong>Mayan Indians </strong>எனும் மக்களின் புனித நூலிலும் நோவாவை போன்ற <strong>தாபி (Tapi)</strong> என்பவன் கதை கூறப்பட்டுள்ளது. <br /> <br />பெர்ஷிய மொழி இலக்கியமான <strong>வென்டிடாத் (vendidad)</strong> என்பதிலும் வெள்ளம் பற்றிய குறிப்புகள் காண கிடைகின்றன.<br /><br />வடஇந்திய இலக்கியத்திலும்<strong> மனு </strong>எனும் வீரன் கதை காணக்கிடைக்கிறது.<br /><br />ஆதி கிரேக்க கதைகளிலும் <strong>துகிலியான் (Deukalion)</strong> என்ற கதாபாத்திரம் காண கிடைக்கிறது.<br />சீனமொழி இலக்கியத்தில் ,தெற்கு கடல்பகுதி, ஆஸ்திரேலியா, பெருவில் உள்ள Inca மொழி, மற்றும் வடஅமெரிக்க ஆதி இலக்கியங்களிலும் இதே போன்ற கதைகளை பார்க்க முடிகிறது. <br /> <br />இந்த புராண இதிகாச கதைகள் எல்லாம் கடவுளர்கள் தீயவைகளை அழித்து நல்லவர்களை நிலை நிறுத்துவதாகவே காட்டுகின்றன. இந்த கதைகள் எல்லாம் வெள்ளம் பூமியை சுத்திகரிக்கும் ஒரு சக்தியாகவே உருவகபடுத்துகின்றன. <br /> <br />நமது கேள்வி என்னவென்றால், "உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த மனிதர்களின் இலக்கியங்கள் அனைத்தும் ஒரே விஷயத்தை பேசுவதால் உண்மையில் இப்படி ஒரு பேரழிவு நிகழ்ந்திருக்குமா?" என்பதே.<br /><br /> இந்த கேள்விக்கு அறிவியலார்கள் பின்வருமாறு பதிலளிகிறார்கள். <br /> <br />அறிவியலார் கற்காலத்தின் துவக்கத்தில் தொடர்ந்து பெருமழை பெய்திருக்க வாய்ப்பு இருந்ததை ஒப்புகொண்டாலும் உலகமே நீரில் மூழ்கி இருக்க வாய்பில்லை என்றே உறுதிபட கூறுகின்றனர்.<br /> <br />பிரான்ச் நாட்டின் அறிவியலார் <strong>A.Capart </strong>ன் கருதுகோள்படி ஸ்காண்டிநேவியா தீபகற்பத்தில் ஏற்பட்ட பருவ நிலை மாற்றங்களினால் பனிக்கட்டிகள் உருகி வெள்ளம் ஏற்பட்டு இருக்கலாம்.<br />ஆனால் மொத்தத்தில் முடிந்த முடிவாக ஆய்வாளர்கள் கூறுவது என்னவெனில் Ice age இன் முடிவில் பொருளாதார மாற்றம் ஏற்பட்டது வேட்டையாடி வாழ்ந்த மனிதன் விவசாயம் செய்துவாழ தலைப்பட்டான், இதையே தான் பைபிளில் கூறப்படும் நோவா கதையும் உணர்த்துகிறது.நோவா கதையில் நோவா மிருகங்களையும் விதைகளையும் பாதுகாத்து வெள்ளம் வடிந்தபின் வேறு இடத்தில் வாழ தலைப்பட்டதாக கூறுவது தெரிவிப்பதாக கூறுகின்றனர்.<br /> _____________________Rajkumar Rhttp://www.blogger.com/profile/08686505385928166241noreply@blogger.com0