Showing posts with label அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது எப்படி ?. Show all posts
Showing posts with label அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது எப்படி ?. Show all posts

Monday, October 11, 2010

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது எப்படி ?

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது எப்படி ?     

    அரசு பள்ளிகளை பற்றி ஒரு தவறான இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால் ஒரு மட்டமான எண்ணம் மக்களிடையே மேலோங்கி நிற்கிறது என்பது மிகவும் உண்மை. இதற்கு யார் காரணம் அரசா? அரசியல் வாதிகளா? அல்லது மக்களா? என்று பகுத்து ஆய்வதுவே இந்த மடலின் நோக்கம்.

     நாட்டுகாக உழைப்பதாய்  மார் தட்டிக்கொள்ளும் எத்தனை அரசியல் வாதிகளின் குழந்தைகள் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிகிறார்கள்?  சரி அவர்கள் தான் போகட்டும் எத்தனை அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் குழந்தைகள் நகராட்சி பள்ளிகளில் படிகிறார்கள்? சரி அவர்களையும் விட்டுவிடலாம்  அந்த பள்ளிகளில் பணிபுரியும் எத்தனை ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிகிறார்கள் ? வேதனையான உண்மை என்ன வென்றால் அவர்களின் குழந்தைகளே வேறு தனியார் பள்ளிகளில் படிகிறார்கள். ஆக அந்த ஆசிரியர்களுக்கே தங்களின் திறமையில் நம்பிக்கை இல்லையா? அல்லது அரசு, பள்ளிகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவது இல்லையா என்று பார்த்தோமானால் அரசு மற்றும் ஆசிரியர்களின் ஒட்டுமொத்த புறகணிப்பு தான் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
        சரி இதை சரிப்படுத்தி கல்வி கூடங்களின் நிலைமையை மேம்படுத்த என்ன செய்யலாம் ?
 முதல் கட்டமாக அரசு பணிபுரியும் அனைவரின் குழந்தைகளும் அரசு பள்ளியில் தான் கல்வி பயில வேண்டும் என்பதை கட்டாய படுத்த வேண்டும் மீறி அவர்கள் தனியார் பள்ளிகளை படிக்கவைக்க விரும்பும் பட்சத்தில் அதே  தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை அரசுக்கு செலுத்திவிட்டு தனியார் பள்ளியில் படிக்கவைக்க அனுமதிக்கலாம் இந்த மாற்று திட்டத்தினால் அரசுபள்ளிகளில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் குழந்தைகள் அதிகம் படிப்பதால் மாற்றந்தாய் மனபோக்கு மாறி பள்ளிகளின் தரம் மேம்படும்.