Monday, September 27, 2010

பள்ளி குழந்தைகளுக்கு தனி பயிற்சி(Tution) வரமா சாபமா ?

      இன்றைய  குழந்தைகளின் கல்வி தேடலின் பாதையை சற்று உற்று நோக்கினால் நமது மனம் கனத்து விடும். அதிகாலையில் முதுகில் புத்தக சுமையுடன் பள்ளிகிளம்பும் பிள்ளைகள்  மாலையில் உடலும் மனமும் சோர்ந்து வீடு திரும்பும் குழந்தைகளை அத்துடன் விடுவதில்லை பெற்றோர் மறுபடியும் மாலையில் புத்தக மூட்டை முதுகில் ஏற்றப்பட்டு , சுமைதூக்கும் கழுதையாய் தனி பயிற்சிக்காய் ஒரு கூடுதல் பயணம்.
     குழந்தைகளை கொடுமை படுத்தும் இந்த அவலத்திற்கு  யார் காரணம் ? கல்வி புதையல் தேடும் பெற்றோரா ? அல்லது காசுக்கு கடைவிரித்திருக்கும் கல்வி நிறுவனங்களா? விடை தேடி பயணித்தால் கல்விநிறுவனங்கள் மற்றும் பெற்றோரின் பேராசைக்கும் கனவுகளுக்கும் பலியாகி போனது குழந்தைகளின் நிகழ்காலம் மட்டுமல்ல ஆரோக்கியமான வருங்கால இந்தியா என்ற கனவும் தான் !
   சரி இந்த தனி பயிற்சிக்கு என்ன அவசியம் ? அப்படியானால் பள்ளிகளில் என்ன தான் சொல்லி கொடுகிறார்கள்? சரியான முறையில் பள்ளிகளில் சொல்லிகொடுபதிலையா ? அப்படி சொல்லிகொடுக்கதானே கட்டணமாக பெரும்தொகையை கொட்டிகொடுகிறோம் பிறகு ஏன்  தனிபயிற்சி என்று என்ற பெற்றோரும் சிந்திப்பதும் இல்லை தட்டிகேட்பதும்  இல்லை. பெற்றோரின் பொறுப்பின்மையும், மற்றபடி தட்டி கேட்க துணியாத மனோபாவம் மற்றும் பேராசையும் குழந்தைகளின் முதுகில் சுமையாய் அழுத்துவது தான் நிஜம்.
    இந்த அவலத்தில் பெற்றோரின் பங்கு அதிகம். எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தைகள் கல்விகற்றுகொள்ள அனுப்புகிறோம் கல்வி கற்றால் போதும் என்று எண்ணுவதில்லை அதற்கும் மேலாக முதல் மதிப்பெண், முதல் மாணவன், படித்து முடித்தவுடன் பெட்டிபெட்டியாய் வாங்க போகும்   ஊதியம் மட்டுமே முதன்மையாய் கருதுவதின் விளைவு தங்களின் பிள்ளைகளின் முதுகில் ஏற்றிய சுமை.
   பள்ளிகளோ பணத்தில் குறியாய் இருக்கும் அளவு கல்வித்தரத்தில் குறியாய் இருபதில்லை.தகுதி குறைவான ஆசிரியர்கள், அதிக பளு நிறைந்த  பாடத்திட்டம் இப்படி பல காரணங்கள். கட்டண குறைபிற்காக போராடும் பெற்றோரும், கூடுதல் கட்டணத்திற்காக போராடும் குழந்தைகளை பற்றி கிஞ்சித்தும் நினைப்பதில்லை.
 
 ஆக மொத்தத்தில் , குறைபாடு உடைய குழந்தைகள் மற்றும் மெதுவாக கற்கும் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமான இந்த தனிபயிற்சி ஏனைய குழந்தைகளுக்கு சாபமாய் போனது உண்மை. ஆனால் இந்த சுமை பெற்றோர்களும் சமுதாயமும் வலுகட்டாயமாக வலிந்து  பிஞ்சுகளின் முதுகில் ஏற்றிய சுமை என்பது தான் வேதனை நிரம்பிய உண்மை .

Tuesday, June 22, 2010

அரசின் கல்விகடன்

சமீபத்திய நாளிதழ் ஒன்றில் அரசின் கல்விகடன் பற்றிய அறிவிப்பை படித்தேன், படித்தவுடன் நிறைய முரண் பாடுகள் அரசின் கல்வி கொள்கைகளில் இருப்பதாக எனக்கு தோன்றியது அதன் பாற்பட்டதே இந்த அஞ்சல்.இந்திய அரசியல் அமைப்பு சட்ட படி அனைவருக்கும் பள்ளி கல்வி என்று சொல்கிறோம் ஆனால் அந்த பள்ளி கல்வியே செல்வந்தருக்கு வசதி படைத்த விதத்திலும், எளியவர்க்கு வசதிகள் இல்லாத அரசு பள்ளிகளிலும் கிடைப்பது மிகவும் வருந்த வேண்டிய ஒன்று தானே ?

சட்டப்படி கல்வி நிறுவனங்கள் லாப நோக்கில் நிறுவப்பட கூடாது ஆனால் உண்மையில் நடப்பது என்ன இன்று வரை தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றிசல் போல கிளம்பிவிட்டன. அரசு அதிகாரிகளின் துணையுடன் அரசியல் வாதிகள் துவங்கும் நிறுவனங்களே அதிகம் இதே நிலை நீடித்தால் என்ன ஆகும் ?

என்ன ஆகும் என்று நான் சொல்வதை விட சின்ன உதாரணம் ஒன்றை நான் குறிப்பிட்டாலே நீங்களே புரிந்துகொள்ள முடியும் . எண்பதுகளில் சுற்றுலா பேருந்தாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களை அனுமதியில்லாமல் கட்டண பேருந்து போல் பயந்து பயன்படுத்திய காலம் போய் இன்று தனி பேருந்து நிலையமே கட்டி தந்து உள்ளது அரசு. இதை போன்ற வணிக ரீதியான லாபநோக்கோடு தனியார் கல்வி நிறுவனங்கள் செயல் பட தான் இந்த கல்வி கடன் உதவி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை அல்லவா?. என்று தனியார் மயமாக்கல் மற்றும் சந்தை பொருளாதாரம் நமது நாட்டில் விதிக்கப்பட்டதோ அன்றே கல்வி வணிகத்துக்கு கொல்லைப்புறமாக அனுமதி வழங்கப்பட்டு விட்டது என்பதே உண்மை.
இதன் விளைவு காலபோக்கில் என்னவாக இருக்கும் ? சாமானியனுக்கும் கடன் வசதி கிடைக்கும் என்று அமைச்சர்கள் ஆரவரிபர்கள் , சாமானியனும் கடன் கிட்டிய மகிழ்ச்சியில் திளைப்பான் ஆனால் உண்மையில் என்ன நடக்கும். சாமானியனின் வரிப்பணம் வங்கிகள் மூலம் அவனுக்கே கடனாக கொடுக்கப்பட்டு கல்வி வியாபாரிகள் கல்லாவில் கொண்டுபோய் சேர்க்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஆகமொத்தத்தில் கல்வி வியாபாரமாக மாற்றப்பட்டு விட்டது என்பதில் சந்தேகம் எஅதும் இல்லை, அப்படி வியாபாரமாக மறைமுகமாக அங்கிகாரம் கொடுத்துவிட்டால் என்ன நடக்கும் ? நமது கல்வி வியாபாரிகளின் துணையுடன் உலகளவில் கொள்ளை பணம் பங்கு போடப்படும் என்பதே உண்மை !!!!!!!!

Monday, December 7, 2009

உலக அளவில் வெள்ளம் பற்றிய புராண இதிகாச கதைகள்

உலக அளவில் வெள்ளம் பற்றிய புராண இதிகாச கதைகள்

உலகத்தை விழுங்கிய பல்வேறு கதைகள் உலகஅளவில் பல்வேறு மொழிகளில் உள்ள இதிகாச புராண மற்றும் வாய் மொழி இலக்கியங்களில் காண கிடைகிறது. இவைகளை சற்று ஆராயும் நோக்கில் கூர்ந்து நோக்கினால், இவை ஒருவேளை கடந்த காலத்தில் உண்மையிலேயே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு இன மக்களின் மனதில் இருந்து எழுந்தவையா? என்ற கேள்வி எழுகின்றது, நாமும் சற்று விரிவாக அலசி பார்போமா?

பைபளின் பழைய ஏற்பாடு கூறும் நோவாவும் அவன் பயணம் செய்த பேழையும் பற்றிய கதை கிமு 8 மற்றும் கிமு 6 வது நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இஸ்ரேல் மற்றும் யூதேய நாட்டில் வழங்கிவந்தது அதன் மூலக்கதை மெசபடோமியா ( இன்றைய ஈராக் )வில் வழங்கி வருகிறது.

சுமேரியாவில் கிமு 300 இல் வழங்கிவந்த கதையும், ஆதி காவியமான கில்மேஷ் கூறும் வெள்ளம் பற்றிய தகவல்களை கூறுகிறது.

மத்திய அமெரிக்காவில் உள்ள Mayan Indians எனும் மக்களின் புனித நூலிலும் நோவாவை போன்ற தாபி (Tapi) என்பவன் கதை கூறப்பட்டுள்ளது.

பெர்ஷிய மொழி இலக்கியமான வென்டிடாத் (vendidad) என்பதிலும் வெள்ளம் பற்றிய குறிப்புகள் காண கிடைகின்றன.

வடஇந்திய இலக்கியத்திலும் மனு எனும் வீரன் கதை காணக்கிடைக்கிறது.

ஆதி கிரேக்க கதைகளிலும் துகிலியான் (Deukalion) என்ற கதாபாத்திரம் காண கிடைக்கிறது.
சீனமொழி இலக்கியத்தில் ,தெற்கு கடல்பகுதி, ஆஸ்திரேலியா, பெருவில் உள்ள Inca மொழி, மற்றும் வடஅமெரிக்க ஆதி இலக்கியங்களிலும் இதே போன்ற கதைகளை பார்க்க முடிகிறது.

இந்த புராண இதிகாச கதைகள் எல்லாம் கடவுளர்கள் தீயவைகளை அழித்து நல்லவர்களை நிலை நிறுத்துவதாகவே காட்டுகின்றன. இந்த கதைகள் எல்லாம் வெள்ளம் பூமியை சுத்திகரிக்கும் ஒரு சக்தியாகவே உருவகபடுத்துகின்றன.

நமது கேள்வி என்னவென்றால், "உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த மனிதர்களின் இலக்கியங்கள் அனைத்தும் ஒரே விஷயத்தை பேசுவதால் உண்மையில் இப்படி ஒரு பேரழிவு நிகழ்ந்திருக்குமா?" என்பதே.

இந்த கேள்விக்கு அறிவியலார்கள் பின்வருமாறு பதிலளிகிறார்கள்.

அறிவியலார் கற்காலத்தின் துவக்கத்தில் தொடர்ந்து பெருமழை பெய்திருக்க வாய்ப்பு இருந்ததை ஒப்புகொண்டாலும் உலகமே நீரில் மூழ்கி இருக்க வாய்பில்லை என்றே உறுதிபட கூறுகின்றனர்.

பிரான்ச் நாட்டின் அறிவியலார் A.Capart ன் கருதுகோள்படி ஸ்காண்டிநேவியா தீபகற்பத்தில் ஏற்பட்ட பருவ நிலை மாற்றங்களினால் பனிக்கட்டிகள் உருகி வெள்ளம் ஏற்பட்டு இருக்கலாம்.
ஆனால் மொத்தத்தில் முடிந்த முடிவாக ஆய்வாளர்கள் கூறுவது என்னவெனில் Ice age இன் முடிவில் பொருளாதார மாற்றம் ஏற்பட்டது வேட்டையாடி வாழ்ந்த மனிதன் விவசாயம் செய்துவாழ தலைப்பட்டான், இதையே தான் பைபிளில் கூறப்படும் நோவா கதையும் உணர்த்துகிறது.நோவா கதையில் நோவா மிருகங்களையும் விதைகளையும் பாதுகாத்து வெள்ளம் வடிந்தபின் வேறு இடத்தில் வாழ தலைப்பட்டதாக கூறுவது தெரிவிப்பதாக கூறுகின்றனர்.
_____________________